பாடல்: சொர்ணலிங்கம
இறைவனின் கருணையில் நான் பிறந்தேன்
இசையெனும் சோலையில் நான் தவழ்ந்தேன்
குயிலிடம் நான் தினம் கானம் பயின்றேன்
கூவிடும் குயிலாய் நான் வளர்ந்தேன்
இசையே உயிரே
அழகே என் மடிமேல் வா
தமிழே என் உயிரல்லவா
இசையே என் மூச்சல்லவா - இறைவனின்
வாழ்வின் சுகங்கள் ஏது ஏதுமின்றி
நாளும் பொழுதும் ராகம் ரகமென்றே
அலைந்தேன் அலைந்தேன் இசைபாட
காலம் ஒருநாள் மாறும் மாறுமென்
பாடல் அரங்கில் ஏறும் ஏறும் என்
ஆசைக் கனவு நனவாகும் நாளேது
இனமே நான் சேயல்லவா
அருகே நீ வா என்றென்றும் தாயல்லவா - இறைவனின்
ஏனோ என்முகம் யாரும் காணவில்லை
பாடும் ராகம் காதில் கேட்கவில்லை
இசையே ஒருவன் தனிச் சொத்தா
மாற்ஹ்ன் மல்லிகை வாசம் வீசுமா
வீட்டில் பூத்தால் நாற்றமாகுமா
பாடப் பாட புது ராகம் பிறக்காதா
இனமே நான் சேயல்லவா
அருகே நீ வா என்றென்றும் தாயல்லவா - இறைவனின்